search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி மதுபானம் பறிமுதல்"

    வாணியம்பாடியில் போலியாக தயாரிக்கப்பட்ட பீர், பிராந்தி, ரம் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி கலால் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையில் போலீசார் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கலையம்பட்டு என்ற இடத்தில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் போலியாக தயாரிக்கப்பட்ட பீர், பிராந்தி, ரம் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், மதுகடத்தி வந்த லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து மதுபாட்டில் கடத்தி வந்த வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்த தங்கதுரை (வயது 26), என்பவரை கைது செய்தனர். இதேப்போல் அந்த வழியாக பைக்கில் வந்தவரை பிடித்து சோதனை நடத்தியதில் 150 லிட்டர் கள்ள சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    கள்ளசாராயம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்த பழனி (வயது 57), என்பவரை கைது செய்தனர். #tamilnews
    ×